கதிராமங்கலம் சென்ற பி.ஆர் பாண்டியன் உள்பட 7 பேர் கைது
கதிராமங்கலம் சென்ற விவசாயிகள் சங்கத்தலைவர் பிஆர்.பாண்டியன் குழுவினர் நடுவழியில் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள கதிராமங்கலம் சென்ற பிஆர்.பாண்டியன் தலைமையிலான குழுவினரை போலீசார் கைது செய்தனர்.
கதிராமங்கலம் கிராமத்தில் மீத்தேன் பணிகளை தொடங்கியதால் அக்கிராம மக்களுடன் சுற்றுவட்டார கிராம விவசாயகளும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஒஎன்ஜிசி பணிகளை தடுக்க சென்ற மீத்தேன் எதிர்ப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அடுத்த இரண்டாம் நாளில் கதிராமங்கலம் சென்ற காவிரி உரிமை மீட்புக்குழு பெ.மணியரசன் உள்ளிட்டவர்களையும் நடுவழியில் கைது செய்தனர்.
மக்களின் போராட்டம் அதிகமான நிலையில் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினார்கள். இந்த நிலையில் பிஆர்.பாண்டியன் தலைமையில் அவரது சங்க நிர்வாகிகள் குடவாசல் வழியாக கதிராமங்கலம் சென்றனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் பி.ஆர்.பாண்டியன் மற்றும் தஞ்சை மண்டல தலைவர் டி.பி.கே.இராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் செந்தில்குமார், குடவாசல் ஒன்றிய தலைவர் சரவணன், மன்னை ஒன்றிய தலைவர் மனோகரன் குடவாசல் சுரேஷ் மன்னை ஒன்றிய செயலாளர் பி.கே.கோவிந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கும்பகோணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கைக்கு பிஆர் பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கதிராமங்கலம் யார் சென்றாலும் கைது என்பது விவசாயிகளை அச்சுறுத்தும் செயலாக உள்ளது என்று கூறும் விவசாயிகள் இதே போல நெடுவாசலுக்கும் நடக்கலாம் என்பதால் நெடுவாசல் போராட்டத்தை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications