விவசாயிகளின் தொடர் மரணம்.. பொங்கல் புதுப்பானைகளை கவிழ்த்து பெண்கள் நூதனப் போராட்டம்
வறட்சியின் காரணமாக விவசாயிகளின் தொடர் மரணம் நடந்து வருகிறது. இதனைத் தடுக்கக் கோரி சென்னையில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது.
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் கொண்டாடும் வேளையில் விவசாயிகளின் மரணம் தமிழகத்தை உலுக்கி வருகிறது. இதனைத் தடுக்க உடனடி நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரி, பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்ட போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின் போது, பொங்கல் வைக்க வேண்டிய புதுப்பானைகளை தலைகீழாக கவிழ்த்து வைத்தும், எலும்புக்கூடுகளை பானையில் வரைந்து வைத்தும் தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும், "உழவன் சேற்றிலே கை வைத்தால்தான் நாம் சோற்றிலே கை வைக்க முடியும்", "உழவர் பொங்கல் திருநாள் துக்கநாள்" , "அரசன் முதல் ஆண்டி வரைக்கும் உணவளிப்பவன் உழவன் என்பதை மறவாதே" என்ற வாசகங்களைத் தாங்கிய பேனர்களைப் பெண்கள் பிடித்துக் கொண்டு கோஷங்களை உரக்க எழுப்பி போராட்டத்தை நடத்தினார்கள்.

இந்தப் போராட்டத்தில் குழந்தைகள் மற்றும் விவசாய அமைப்பினரும் கலந்து கொண்டு விவசாயிகளின் தற்கொலையையும் மரணத்தையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications