சென்னை தந்தை,மகன் கொலையில் திருப்பம் – மீண்டும் பிரேத பரிசோதனை!
சென்னை: சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதைக்கப்பட்ட தந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் பிணமாக கிடந்தார். இந்த நிலையில் செம்பரம்பாக்கம் கற்பக விநாயகர் தெருவில் வசிக்கும் குமார் என்பவர், "நான் தான் மணியை கொலை செய்தேன்" என்று குடிபோதையில் பேசிக்கொண்டிருந்தார்.
நசரத்பேட்டை போலீசார் குமாரை பிடித்து விசாரித்த போது, கொலை செய்யப்பட்ட மணி அடிக்கடி மது குடித்து விட்டு பல இடங்களில் விழுந்து கிடந்துள்ளார். இதனால் தனக்கு அவமானமாக இருக்கிறது.
எனவே மணியை கொலை செய்யுமாறு அவரது தம்பியும், செம்பரம்பாக்கம் ஊராட்சி அ.தி.மு.க. துணைத்தலைவரின் கணவருமான தியாகராஜன் என்பவர் கூறியதால் கொலை செய்ததாக குமார் தெரிவித்தார்.
மேலும் மணியின் தந்தை தேவராஜ் என்பவரும் மது குடித்து விட்டு பல பெண்களுடன் பேசிக்கொண்டு இருந்ததால் அவரையும், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொலை செய்ததாக குமார் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் தேவராஜ் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாகக் கூறி குடும்பத்தினர் பிணத்தை புதைத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தந்தை, மகன் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமார், தியாகராஜன், அவரது மனைவி பவானி, மகள் பாரதி, கார் டிரைவர் சரவணன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இதில் பாரதியின் கணவர் செல்வம் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு செல்வத்தை போலீசார் கைது செய்தனர். கைதான 6 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனால் புதைக்கப்பட்ட தேவராஜின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications