புதுக்கோட்டை ஐ.ஓ.பி.வங்கியை கண்டித்து பெண் ஆட்டோ ஓட்டுனர் போராட்டம்: குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்
வங்கி செயல்பாட்டினை கண்டித்து பெண் ஆட்டோ ஒட்டுனர் போராட்டம் நடத்தினார்.
Recommended Video

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியை கண்டித்து பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அம்பேத்கர் சிலை அருகே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவர் தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனர். இவர் புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் நகை கடன் பெற்றுள்ளார். மேலும் அதே வங்கியில் கார் லோனும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கார் லோனுக்கு தவணை தொகை செலுத்த போதிய நாள் இருந்தும் வங்கி நிர்வாகம் சரோஜா கார் லோன் செலுத்தவில்லை என்று கூறி, அவர் வங்கியில் வைத்துள்ள நகையை ஏலத்திற்கு விடப் போவதாக அறிவித்ததாக கூறப்படுகின்றது,
இதனை கேள்விப்பட்ட சரோஜா வங்கிக்கு சென்று, "காரை எடுத்துக்கொள்ளுங்கள், காருக்கான தொகையை உங்களிடம் கொடுத்துவிட்டு, பிறகு வந்து காரை பெற்றுக் கொள்கிறேன், நகைகளை மட்டும் ஏலத்திற்கு விட வேண்டாம்" என கேட்டு கொண்டதாக தெரிகிறது. ஆனால் வங்கி நிர்வாகம் சரோஜாவின் நகையை 3 லட்சத்து 5 ஆயிரத்துக்கு ஏலம் விட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த சரோஜா, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையில் அமர்ந்து இந்தியன் ஓவர் சீஸ் வங்கியை கண்டித்தும் அவரது காரை திரும்ப தரக் கோரியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரருக்கு ஆதரவாக மற்றொரு பெண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரோஜாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் சரோஜா பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் அவரை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications