சென்னை அரசு அச்சகத்தில் மீண்டும் பயங்கர தீ விபத்து- பலத்த சேதம்!!

சென்னை அரசு அச்சகம் 200 ஆண்டுகள் பழைமையானது. கடந்த 1834-ம் ஆண்டு இது கட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆவணங்கள் இங்குதான் அச்சடிக்கப்படுகின்றன.
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இந்த அச்சகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதில் ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அச்சகத்தில் பைண்டிங் பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ மற்ற இடங்களுக்கும் பரவியது. அப்போது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதைத் தொடர்ந்து 9 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பின்னரும் அப்பகுதியில் புகை மூட்டத்துடன் அனல் வீசியது. இதனால் தீயனைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொண்டே இருந்தனர்.
இந்த விபத்தால் அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது. அரசு அச்சகத்தில் கடந்த ஜூன் மாதம் தீவிபத்து ஏற்பட்டிருந்த நிலையில் சில மாதங்களிலேயே மீண்டும் தீவிபத்து ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications