தங்கச்சிமட மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு... 20ம் தேதி, சுஷ்மாவுடன் பேச்சுவார்த்தை
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கடந்த 7 நாள்களாக ராமேஸ்வரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை தற்காலிகமாக
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தங்கச்சிமடத்தில் கடந்த 7 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடல் எல்லையில் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடந்த 6ம் தேதி இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவரின் கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை வீரரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை மூட வேண்டும், மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்திர தீர்வு காண வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 7 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர்களின் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, பிரிட்ஜோவின் உடலை இன்று அடக்கம் செய்யவுள்ளனர்.
இந்நிலையில் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தங்கச்சிமடத்தைச் சேர்ந்த போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். மேலும் வரும் மார்ச் 20-ஆம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உயரதிகாரிகளை மீனவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
அப்போது பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதியுதவி கோருவது, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்துவது உள்ளிட்டவை பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என்று தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications