தினமும் 3 பேர் உதவி கேட்கிறார்கள்.. என்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி.. அதிர்ச்சி ஆய்வு
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்கள் அதிகம் கஷ்டப்படுவதாக ஆய்வு ஒன்று வெளியாகி இருக்கிறது.
Recommended Video

சென்னை: சமீப காலங்களில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் அதிகரித்து இருக்கிறது. வெளிநாட்டில் தங்கள் மகள் வாழ்வது பலருக்கு பெருமையாகவும், கர்வமாகவும் இருக்கிறது.
தமிழ் சினிமா கூட என்.ஆர்.ஐ ஆண்களை காமெடியன்களாக மட்டுமே காட்டி இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருக்கும் குரூரம் தற்போது வெளியாகி இருக்கும் கணக்கெடுப்பு மூலம் தெளிவாகி இருக்கிறது.
இந்திய வெளியுறவுத்துறைக்கு எத்தனை புகார்கள் இதுவரை வந்துள்ளது, என்ன மாதிரியான புகார்கள் இதுவரை வந்து இருக்கிறது என்பது போன்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

எவ்வளவு
கடந்த 2015 ஜனவரி 1ல் இருந்து நவம்பர் 30, 2017 இடையே இருக்கும் 1,064 நாட்களில் மொத்தம் 3,328 பெண்கள் தங்கள் கணவன் குறித்து புகார் அளித்து இருக்கிறார். சராசரியாக ஒருநாளைக்கு 3 புகார்கள் வருகிறது. சரியாக சொல்வதென்றால் 8 மணி நேரத்திற்கு ஒரு புகார் வருகிறது.

மாநிலம்
அனைவரும் எங்களை எப்படியாவது கணவனிடம் இருந்து காப்பற்றுங்கள் என்று உதவி கேட்கிறார்கள். அதிகமான புகார்களை பஞ்சாப்பில் இருந்து வெளிநாட்டில் மணமுடித்த பெண்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு அடுத்து ஆந்திரா தெலுங்கானா பெண்கள். அதற்கு அடுத்தபடியாக குஜராத் பெண்கள் புகார் கொடுக்கிறார்கள்.

காரணம்
பெரும்பாலும் வரதட்சணை கொடுமை காரணமாக இப்படி போன் வருகிறது. குடித்துவிட்டு தொல்லை செய்யும் ஆண்கள் இருக்கிறார்கள். அதுபோல் வேறு பெண்களுடன் வாழும் ஆண்களும் இதில் இருக்கிறார்கள். ஆந்திராவில் இருந்து அதிக வரதட்சணை சம்பந்தமான போன் வருகிறது.

என்ன நடக்கிறது
சிலர் மிகவும் கொடூரமாக கூட நடந்து கொள்கிறார்கள். மனைவிகளை அடிப்பது, துன்புறுத்துவது என நடந்து கொள்கிறார்கள். சிலர் மனைவிகளின் பாஸ்போர்ட்களை கிழித்து போட்டுவிட்டு அநாதையாக அலைய விட்டும் இருக்கிறார்கள்.

இன்னும்
இந்த புகார்கள் எல்லாம் நேரடியாக வெளியுறவுத்துறைக்கு வந்த புகார் மட்டுமே. பல புகார்கள் வக்கீல்களிடமும், குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் சொல்லப்பட்டு இருக்கிறது. இதில் பல புகார்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கும் விஷயம் ஆகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications