For Daily Alerts
Just In
மாஜி அமைச்சரின் அண்ணன் சிவகங்கை அருகே கார் விபத்தில் பலி
சிவகங்கை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் சகோதரர் உயிரிழந்தார்.
காரைக்குடி: சிவகங்கை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் சகோதரர் உயிரிழந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்தவர் கோகுல இந்திரா. இவரது அண்ணன் தேவ பாண்டியன்.
52 வயதான இவர், சிவகங்கையை அடுத்த ஒக்கூர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணாநகர் பகுதியில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கோகுல இந்திராவின் அண்ணன் தேவபாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
Comments
former minister gokula indira brother dead accident முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சகோதரர் பலி விபத்து
English summary
Former Minister Gokula Indira's brother Deva pandiyan died in a accident near Sivagangai. His car met with an accident in this accident he died on the spot.
Story first published: Thursday, October 12, 2017, 9:53 [IST]