எத்தியோப்பியாவில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தர வேண்டும்: ராமதாஸ்

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இரங்கல்...
எத்தியோப்பியாவில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் இரு நாட்களுக்கு முன் கொதிகலன் வெடித்த விபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம், முத்துகிருஷ்ணன் ஆகிய இருவர் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிராதரவான குடும்பங்கள்...
கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த இருவருமே ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களின் குடும்பங்களுக்கு இவர்கள் தான் வருவாய் ஆதாரமாக இருந்துள்ளனர். கும்பகோணத்தை அடுத்த வீராஞ்சேரியைச் முருகானந்தத்திற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற போதிலும், அவரது சகோதரர் மற்றும் சகோதரியை இவர் தான் கவனித்து வந்தார். உயிரிழந்த இன்னொருவரான அண்டக்குடி முத்துகிருஷ்ணனை நம்பி தான் அவரது தாய், மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருந்தார். இவர்களின் மறைவால் இரு குடும்பங்களும் ஆதரவற்றவையாகி விட்டன.
நடவடிக்கை...
எத்தியோப்பியா விபத்தில் கொல்லப்பட்ட இருவரின் உடலையும் சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இழப்பீடு...
விபத்துக்குக் காரணமான சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து பன்னாட்டு விதிகளின்படி இருவரின் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தருவதுடன், மத்திய, மாநில அரசுகளும் தங்களின் பங்காக தலா ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்க முன்வர வேண்டும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications