மனதில் மாசற்றவர்கள் நாங்கள்… வாய்ப்பு தாருங்கள்: வைகோ
தூத்துக்குடி: மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை தூத்துக்குடிமாவட்டம் குளத்தூரில் இருந்து வைகோ தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முன்னதாக அங்கு அவர் பேசினார் அப்போது அவர் கூறியதாவது
578 தமிழக மீனவர்களின் படுகொலைக்கு மத்தியஅரசு தான் காரணம். இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன், சாத்தான் கையால் பதவி ஏற்றுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தொடர்ந்து 17 ஆண்டுகளாக போராடி வருகிறேன். தற்போதைய ஆட்சியாளர்களும் , கடந்த ஆட்சியாளர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

ஸ்டெர்லைட் நச்சு
கடைசியாக விஷவாயு வெளியேறியதால் மக்கள் போராட்டம் வெடித்தது. அதனால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்தது. ஸ்டெர்லைட் ஆலையின் நச்சு புகையால் தூத்துக்குடி மட்டுமல்ல. குளத்தூர்வரை மக்கள் பாதிப்பு அடைகிறார்கள்.

மத்திய அரசு வஞ்சகம்
முல்லை பெரியாறு பிரச்சினை, காவிரி பிரச்சினை, ஆந்திரா பாலாறு பிரச்சினை எதுவானாலும் சரி. அதில் தமிழகம் தான் வஞ்சிக்கப்படுகிறது. இதற்கு மத்தியஅரசு தான் காரணம்.

அன்னிய நிறுவனங்கள்
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அடுத்த முறை ஆட்சிக்கு வரக்கூடாது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வால்மார்ட் போன்ற பெரிய அன்னிய நிறுவனங்கள் தமிழகத்தில் கால் பதிக்கத் தொடங்கி விடுவார்கள். இதனால் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

மக்கள் நலன் முக்கியம்
எங்களிடம் காசு இல்லை. ஆனால் மனதில் மாசற்றவர்கள் நாங்கள். கட்சி பாகுபாடின்றி பொதுமக்களின் நலனுக்காக உழைக்க கூடிய இயக்கம் ம.தி.மு.க. என்றார் வைகோ.

விடிய விடிய
குளத்தூரை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் குளத்தூரை தொடர்ந்து வேலாயுத புரம், மேல்மாந்தை, பெரியசாமிபுரம், வேம்பார், சூரங்குடி, ஊசிமேசியாபுரமம், அரியநாயகிபுரம், விளாத்திகுளம், சித்தவநாயக்கன்பட்டி, சிங்கிலிபட்டி, வேடு லிப்பட்டி, கழுகாசலபுரம், படர்ந்தபுளி வரை விடிய விடிய பிரச்சாரம் செய்தார் வைகோ

தொடர்ந்து 2 தினங்கள்
செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு புதூர் ஒன்றியம் கருப்பூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து தோள்மாலைப்பட்டி, வடக்கு முத்துலாபுரம், ஆகிய ஊர்களின் வழியாக பிரசாரம் செய்து வெம்பூரில் பிரசாரத்தை முடிக்கிறார்.
புதன்கிழமை மாலை 3 மணிக்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் அன்னை தெரசாநகரில் பிரசாரத்தை தொடங்குகிறார். படர்ந்தபுளி, ஆலம்பட்டி, சாலைப்புதூர், மணியாச்சி, இந்திராநகர், சீனிவாசநகரில் பிரசாரத்தை முடிக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications