தோல்வியால் இந்திய அரசியலில் இருந்து காங். ஒதுக்கப் பட்டதாக அர்த்தம் இல்லை: ஞானதேசிகன் கருத்து
சென்னை: நாடு முழுவதும் குறைந்த இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதால் இந்திய அரசியலில் இருந்து அக்கட்சி ஒதுக்கப் பட்டதாக அர்த்தம் இல்லை என தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
16வது லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப் பட்டு வருகின்றன. அதன்படி, பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி மிகக் குறைந்த இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன்.

அப்போது அவர் பேசியதாவது :-
லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளதாகவே கருதுகிறோம். வாக்கு சீட்டால் ஆட்சி மாற்றம் நடப்பது மகிழ்ச்சியே.
பாஜக உள்ளிட்ட வெற்றி பெற்ற கட்சிகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள். குறைந்த இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால், இந்திய அரசியலில் இருந்து காங்கிரஸ் ஒதுக்கப் பட்டதாக அர்த்தம் இல்லை
இனி வரும் காலங்களில் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து அதனை காங்கிரஸ் மாற்றிக் கொள்ளும்.
பாஜக கூறுவது போல் நாடு முழுவதும் அலை வீசவில்லை. ஆனால், பாஜகவின் பிரச்சார வலிமை சிறப்பாக இருந்தது. பல நேரங்களில் பிரதமர் வேட்பாளராக இருந்தும் கூட மோடி பிரச்சாரங்களில் கலந்து கொண்டார். ஆனால், தனக்குத் தோன்றியதை புரட்டிப் பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்' என இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக அமர காங்கிரஸ் தயாராக இருப்பதாக தெரிவித்த ஞானதேசிகன், தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்ட பின்னர், இது தொடர்பாக விரிவாக பேசலாம் எனக் கூறி தனது பேட்டியை முடித்துக் கொண்டார்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications