”என் பேத்தியைக் கண்டுபிடித்து தாருங்கள்”- செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய தாத்தா
வாழப்பாடி: சேலத்தில் மாயமான தனது பேத்தியினை கண்டுபிடித்துத் தரக் கோரி செல்போன் டவரில் ஏறி நின்று போராட்டம் நடத்திய கூலித் தொழிலாளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தை அடுத்த அயோத்தியாபட்டணம் அருகே உள்ள சின்னக் கவுண்டாபுரம் ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவர் ஒரு கூலி தொழிலாளி.
இவரது 16 வயது பேத்தி கடந்த 2 மாதத்துக்கு முன்பு திடீரென்று மாயமாகி விட்டார். இது குறித்து அவர் காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் கடந்த மாதம் 1 ஆம் தேதியன்று வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடிவந்தனர். தனது பேத்தியை கண்டுபிடிக்காத போலீசாரை கண்டித்து அவர் இன்று காலை 8 மணிக்கு சின்னக்கவுண்டாபுரத்தில் தனியார் கல்லூரி எதிரே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வாழப்பாடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் காரிப்பட்டி போலீசார் வந்து 2 மணி நேரம் அவரிடம் பேசி அவரை கீழே இறக்கினார்கள். பின்னர் அவரை சேலம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications