கிண்டி சிறுவர் பூங்கா திடீர் மூடல்- பொதுமக்கள் குழப்பம்... மோடிக்காகவா?
கிண்டி சிறுவர் பூங்காவுக்கு வழக்கத்திற்கு மாறாக வியாழக்கிழமையான நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கிண்டி சிறுவர் பூங்காவுக்கு வழக்கத்திற்கு மாறாக வியாழக்கிழமையான நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிண்டி சிறுவர் பூங்காவில் ஏராளமான பறவைகள், மற்றும் பல்வேறு வகையான மான் உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் அதிகளவில் உள்ளன.
இந்த பூங்காவுக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்வது வழக்கம். கிண்டி சிறுவர் பூங்காவுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிப்பது வழக்கம்.
இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக வியாழக்கிழமையான நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக விடுமுறை என அறிவிப்பு காகிதம் ஒட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நாளை அடையாறு ஐஐடி மற்றும் அடையாறு புற்றுநோய் மையத்திற்கு வருகை தருகிறார். இதற்காக சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனை கருத்தில்கொண்டே நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.