சாரண-சாரணியர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி.. ஸ்டாலினுக்கு எச்.ராஜா பதில்
சென்னை: சாரணர் - சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் நெஞ்சில், காவி நஞ்சை கலக்கும் வகையில் எச்.ராஜாவுக்கு சாரணர்-சாரணியர் தலைவர் பதவியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து, எச்.ராஜா பேட்டியொன்றில் கூறுகையில், செப்டம்பர் 16ல் சாரணர்- சாரணியர் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். எனது தந்தைக்கு அந்த அமைப்போடு தொடர்புண்டு. எனவே நண்பர்கள், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் நான் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். நிச்சயம் போட்டியிடுவேன்.
சாரணர் - சாரணியர் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அந்த இயக்கத்தினர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே நான் போட்டியிடுகிறேன். என்னை போட்டியிட கூடாது என தடுப்பதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications