ஹாசினி கொலை வழக்கு... தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட்
ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
Recommended Video

செங்கல்பட்டு: ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தாய் கொலை வழக்கில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் வரும் 30-ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்விந்த் பாலியல் பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் குற்றவாளி தஷ்வந்த் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தஷ்வந்த் மீது சென்னை காவல் ஆணையர் குண்டர் சட்டம் பாய்வதாக அறிவித்தார். இந்நிலையில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அவருடைய தந்தை சேகர் (50) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஜாமீன் வழங்கியது
இந்த வழக்கு விசாரணையின் போது போலீஸார் குற்றத்தை நிரூபிப்பதற்கான முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் தஷ்வந்திற்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீன் கொடுத்தது.

மும்பையில் கைது
எனினும் இந்த வழக்கில் அவ்வப்போது தஷ்வந்த் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். இதனிடையே கடந்த 2-ஆம் தேதி தஷ்வந்த் தனது தாய் சரளாவை பணத்துக்காக கொலை செய்து விட்டு தப்பியோடினார். அவரை டிசம்பர் 6-ஆம் தேதி போலீஸார் மும்பையில் கைது செய்தனர். மும்பை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

30-ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த உத்தரவு
இந்நிலையில் ஹாசினி கொலை வழக்கில் கடந்த 5-ஆம் தேதி தஷ்வந்த் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார். தற்போது தாய் சரளா கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் வரும் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் தஷ்வந்த்தை ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications