வெள்ளியங்கிரி மலையில் விதி மீறி கட்டடம்.. ஈஷா மையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்
கோவை வெள்ளியங்கிரி மலையில் விதி மீறி கட்டடம் கட்டப்பட்டது தொடர்பாக ஈஷா யோகா மையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: ஈஷா யோகா மையம் விதிகளை மீறி கோவை வெள்ளியங்கிரி மலையில் கட்டடங்களை கட்டியது தொடர்பான வழக்கில் பதில் அளிக்க ஐகோர்ட் ஈஷா யோக மையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பி.முத்தம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உள்ள இக்கரை பொழுவம்பட்டி கிராமம் மலைப்பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இக்கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி உயர சிவன் சிலையும், அதைச் சுற்றி சுமார் ஒரு லட்சம் சதுர அடியில் தியான மண்டபங்கள், கார் பார்க்கிங், பூங்கா போன்ற கட்டுமானங்கள் சட்டத்துக்கு புறம்பாக மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ளன. மேலும், விதிகளை மீறி மலைப்பகுதியைச் சுற்றிலும் ஆக்கிரமித்து விதிமுறைகளை மீறி கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தை இடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் விதிகளை மீறி 109 ஏக்கரில் கட்டிடங்களை கட்டியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. ஆதியோகி சிவன் அமைத்தற்கான ஆவணங்களை கேட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விதி முறை மீறி கட்டப்பட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பாக பதில் அளிக்க ஈஷா யோகா மையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications