சசிக்கு எதிரான சசிகலா புஷ்பா வழக்கு தள்ளுபடி! அதிமுக விவகாரத்தில் தலையிட தகுதி இல்லை- ஹைகோர்ட்!
அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக சசிகலா புஷ்பா வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதிமுக விவகாரங்களில் சசிகலா புஷ்பா தலையிட தகுதி இல்லை எனவும் ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை நியமிக்க கூடாது என ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிட சசிகலா புஷ்பாவுக்கு தகுதி இல்லை என்ற அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்று வழக்கை முடித்து வைத்தது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலராகியுள்ளார் சசிகலா நடராஜன். முன்னதாக அதிமுகவின் சட்ட விதிகளின்படி கட்சி உறுப்பினராக 5 ஆண்டுகாலம் தொடர்ந்து நீடிக்காதவர் சசிகலா நடராஜன்; ஆகையால் சசிகலா அதிமுக பொதுச்செயலராக முடியாது என ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் தீர்ப்பை ஒத்திவைத்தார். இதனிடையே கடந்த மாதம் 28-ந் தேதி அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விண்ணப்பம் வாங்க லிங்கேஸ்வரன், அக்கட்சி தலைமை அலுவலகம் சென்றிருந்தார். அப்போது சசிகலா ஆதரவாளர்கள் அவரை கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் கடந்த மாதம் 29-ந் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் சசிகலா அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 31-ந் தேதி அதிமுக பொதுச்செயலராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கில் இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் அதிரடி தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு முடிவடைந்துவிட்டது; அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிட அக்கட்சி உறுப்பினராக இல்லாத சசிகலா புஷ்பாவுக்கு தகுதி இல்லை; ஆகையால் சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதிமுகவின் உறுப்பினராக இல்லாத சசிகலா புஷ்பாவுக்கு வழக்கைத் தொடர தகுதி இல்லை என்ற அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மனுவை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications