அரசு அலுவலகங்களில் வியாழன்தோறும் டெங்கு கொசு ஒழிப்பு நாள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
டெங்கு உயிர்த்தடுப்பை தடுக்க விரைவான நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த மாதம் முதல் தமிழகத்தில் வியாழக்கிழமைகளில் டெங்கு கொசு ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படும் என்று அமைச்ச்ர விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்றனர். உள்ளாட்சித்துறை உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

டெங்கு ஒழிப்பு ஆலோசனை
முதல்வர் பழனிசாமி பல்வேறு டெங்கு ஒழிப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினார். பள்ளி கல்வி, கல்லூரிகள் ஒன்றிணைந்து களப் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தேவைப்படும் அத்தனை மருந்து மாத்திரைகளை வாங்கி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

ரத்த தட்டணுக்களை கண்டறிய வசதி
மக்கள் நல்வாழ்வுத் துறையின் 24 மணி நேர காய்ச்சல் கண்காணிப்பு மூலம் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 40 நிமிடங்களில் ரத்த தட்டணுக்களை கண்டறியும் வசதி அரசு மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதனை விரவுபடுத்த முதல்வர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பள்ளிகளில் விழிப்புணர்வு
டெங்கு கொசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறை முடிந்து பள்ளி திறக்க உள்ளதால், பள்ளி வளாகங்களில் கொசுக்கள் இல்லாமல் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பகல் வேளையில் கடிக்கும் கொசுக்களாலேயே டெங்கு பரவுகிறது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வியாக்கிழமைகளில் விழப்புணர்வு நாள்
இந்த மாதம் முதல் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்படும். அன்றைய தினம் அரசு அலுவலகங்களை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

நாளை இலவச நிலவேம்பு கஷாய விநியோகம்
நில வேம்பு கஷாயங்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவசமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை காலை முதல் சென்னை மாநகராட்சி முழுமைக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கும் பணி தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை விரைவுபடுத்தி வருகிறது என்று கூறினார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications