சென்னை, கடலூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும்
சென்னை: தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து நீடிப்பதால் சென்னை, கடலூர் உள்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தலைநகரான சென்னை மழை வெள்ளத்தால் தத்தளிக்கிறது.

வடதமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னை, கடலூர், நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, குமரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை திருவாரூர் உள்பட மொத்தம் 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தமான் அருகே மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இன்று அல்லது நாளை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் தமிழகம் நோக்கி வந்தால் அடுத்து ஒரு வாரம் மழை பெய்யும். இல்லை என்றால் புதன்கிழமை இரவு முதல் மழை குறைய வாய்ப்பு இருக்கிறது.
இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை பகல் நேரத்தில் கடல்பகுதியை நோக்கியும், இரவில் நிலப்பகுதியை நோக்கியும் நகர்கிறது. அதனால் இரவு நேரங்களில் தான் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications