ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த ஜெயக்கொடி ஏன் மாற்றப்பட்டார்?... அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி!
குட்கா ஊழல் வழக்கை விசாரித்து வந்த கண்காணிப்பு ஆணையர் ஜெயக்கொடி திடீரென மாற்றப்பட்டது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை : குட்கா ஊழல் வழக்கை விசாரித்து வந்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஜெயக்கொடி ஐஏஎஸ், திடீரென மாற்றப்பட்டது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திமுகவின் ஆர் எஸ் பாரதி புதிய ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக மோகன் பியாரே நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு ஹைகோர்ட் இந்த கேள்வியை கேட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பனைக்காக அமைச்சர், காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சென்னையில் குட்கா குடோனில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் போது கிடைத்த டைரி ஆதாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயக்கொடி ஊழல் கண்காணிப்புத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

ஜெயக்கொடி குட்கா ஊழல் விவகாரத்தில் சிறப்பான விசாரணை நடத்துவதாக மதுரைக்கிளை நீதிமன்ற நீதிபதி பாராட்டு தெரிவித்த நிலையில், திடீரென ஜெயக்கொடி மாற்றப்பட்டு ஊழல் கண்காணிப்புத் துறை ஆணையராக மோகன் பியாரே நியமிக்கப்பட்டார். மோகன் பியாரேவின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் ஆர்எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஜெயக்கொடி நல்ல முறையில் குட்கா ஊழல் விசாரணையை நடத்தி வந்த நிலையில் அவர் ஏன் திடீரென மாற்றப்பட்டார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications