வனத்துறை ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு சலுகை - பரீசிலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் போலீஸ் துறைக்கு வழங்குவதுபோல, வனத்துறை ஊழியர்களின் வாரிசுகளுக்கும் வேலை வாய்ப்பில் 10 சதவீதம் சலுகை வேண்டும் என்ற கோரிக்கையை 6 வாரத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த தீனதயாளமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் தேர்வாணையம், வனக்காவலர், கள உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பம் கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பில், 10 சதவீத இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும், 30 சதவீதம் பெண்களுக்கும், 5 சதவீதம் முன்னாள் ராணுவத்தினருக்கும், 10 சதவீதம் ஆதரவற்ற விதவைகளுக்கும், 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இந்த தேர்வில் நான் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். என் தந்தை டி.துரைசாமி வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
தமிழக அரசு போலீஸ் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, பணியில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற போலீஸ்காரர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோரது வாரிசுகளுக்கு 10 சதவீதம் இடம் ஒதுக்கியுள்ளது. வனக்காவலர் பதவியும், சீருடை பணியை போன்று சவாலான பணிதான்.
என் தந்தை வனத்துறையில் பணியாற்றி கடந்த 2009 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றுள்ளார். எனவே, இந்த தேர்வில், வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், பணியாற்றுபவர்கள் ஆகியோரது வாரிசுகளுக்கும், போலீஸ் துறையில் வழங்குவது போல 10 சதவீதம் சலுகைகள் வழங்கவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி கே.கல்யாணசுந்தரம் விசாரித்து, மனுதாரரின் கோரிக்கையை தமிழக வனத்துறை முதன்மை செயலாளர், தமிழ்நாடு வனத்துறை சீருடைப்பணியாளர் தேர்வாணைய தலைவர், தலைமை வனபாதுகாவலர் ஆகியோர் 6 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications