தீவிரவாதிகள் நூதன தாக்குதல்... உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை: வீடியோ
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிரவாதிகள் விஷ வாயு மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீவிரவாதிகள் பொதுமக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் விஷ வாயு மூலம் தாக்குதல் நடத்தவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது. அதில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதிகள் விஷவாயு மூலம் தாக்குதல் நடத்த உள்ளதாக எச்சரித்து உள்ளது.

ஆகையால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதனையடுத்து, பல இடங்களில் போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications