'வீடுகளை இடிக்க வேண்டாம்' அதிகாரிகள் காலில் விழுந்து கெஞ்சிய பொதுமக்கள்.. காரைக்குடியில் பரபரப்பு
காரைக்குடி: முன்னறிவிப்பின்றி வருவாய்த் துறையினர் 65 வீடுகளை இடிக்க முயன்ற போது வீடுகளை இடிக்க வேண்டாமென பொதுமக்கள் அதிகாரிகள் காலில் விழுந்து கதறி அழுததால் காரைக்குடி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, ஓ.சிறுவயல் செல்லும் சாலையில் 50 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் 49 பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. காலியாக இருந்த இடங்களில் 65க்கும் மேற்பட்டோர் ராஜீவ் காந்தி நகர் என்ற பெயரில் வீடு கட்டி வசித்து வந்தனர்.

இந்த வீடுகளை முன்னறிவிப்பின்றி போலீசார் பாதுகாப்புடன், தாசில்தார் கண்ணன் தலைமையில் வந்த வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் திடீரென அகற்றினர். அந்த நேரத்தில் பலர் வீடுகளில் இல்லை. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்கள் வைத்திருந்த 20க்கும் மேற்பட்டோரின் வீடுகளும் இடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே 'வீடுகளை இடிக்க வேண்டாம்' என வருவாய்த் துறை அதிகாரிகளின் கால்களில் பொதுமக்கள் விழுந்து கெஞ்சினர். ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் 65 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எந்த முன்னறிவிப்பின்றி திடீரென அதிகாரிகள் வீடுகளை இடித்து தள்ளியுள்ளனர். இதனால் குழந்தைகளுடன் தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு மாவட்ட நிர்வாகம், உரிய இடம் வழங்க வேண்டும் என்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications