எப்படி புலியை பிடிப்பது என்பது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்: வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
ஊட்டி : ஆட்கொல்லி புலிக்கு ஆபத்து இல்லாமல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சிக்கிறோம். அது முடியாத பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி புலியை பிடிப்பது என்பது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
Recommended Video
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினக்குடியில் 3 பேரை கடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலியை தேடி கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி நடக்கிறது. புலியை சுட்டுக்கொல்ல கடும் எதிர்ப்பு எழுந்தது. அதை மயக்க ஊசி போட்டு பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி விளக்கம் அளித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆட்கொல்லி புலிக்கு ஆபத்து இல்லாமல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சிக்கிறோம் என்றார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வன அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேசுகையில், "வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "4 முறையாக கூடலூரில் ஒரு புலி ஆட்களை அடித்துள்ளது. அந்தப் புலியை பிடிக்கும் நோக்கில் கூடலூரில் பகுதியில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல் படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

புலி பிடிக்கும் நிபுணர்
தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், கேரளா புலிகள் பிடிக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். முதுமலை மட்டுமின்றி தேவன் எஸ்டேட், மே பீல்ட் ஆகிய பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

2 கும்கி யானைகள்
புலியை பிடிக்கும் பணியில் 3 மோப்ப நாய்கள், 2 கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் 3 ட்ரோன்கள், அதி நவீன கேமராக்கள், துப்பாக்கிகள், மயக்க ஊசி துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புலியை பிடிக்க முயற்சி
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. புலி விரைவில் சிக்கும் என நம்புகிறோம். புலிக்கு ஆபத்து இல்லாமல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சிக்கிறோம். அது முடியாத பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி புலியை பிடிப்பது என்பது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.

சீக்கிரம் பிடிப்போம்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்கள் எல்லையில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. ஒரு புலி ஒரே பகுதியில் இருக்காமல் மற்ற மாநிலங்களுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. ஒரு நிமிடத்தில் புலியை சுட்டு விடலாம். ஆனால் வேறொரு புலிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது. எவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் புலியை பிடிப்போம். புலி தாக்கி உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications