Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்- தமிழக அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் உள்ள 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிதாக 1000 ஆசிரியர் பணியிடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2014-15ம் கல்வி ஆண்டில் 100 அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். இதை தொடர்ந்து தரம் உயர்த்தப்படும் 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் பட்டியலை தமிழக பள்ளி கல்வி துறை தயாரித்து வந்தது.

தற்போது அப்பட்டியலில் உள்ள 100 உயர் நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி கல்வி துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த பள்ளிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் உள்பட 9 பணியிடங்களும், 100 பள்ளிகளுக்கு தலா 1 தலைமை ஆசிரியர் பணியிடமும் அனுமதிக்கப்படுகிறது. இந்த 100 பள்ளிகளுக்கும் புதிதாக 1000 பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+