நான் தினகரனை விட 18 வருஷம் சீனியர்... ஓ.பன்னீர்செல்வம் தடாலடி!
சென்னை : டிடிவி. தினகரன் ஒரு மாயமான், அவர் சொல்வது போல அவர் ஒன்றும் என்னை கட்சியில் அறிமுகம் செய்யவில்லை, நான் அவரை விட 18 வருஷம் சீனியர் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது : தொகுதியில் இன்றும் 20 ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு வாக்காளர்கள் இன்னும் பணம் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர். தினகரனைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அவர் ஒரு மாயமான்.
மாயமானை நம்பிப்போனவர்களுக்கு என்ன கதிஏற்பட்டது என்று ராமாயணத்தில் படித்திருப்பீர்கள், அந்தக் கதை தான் நடக்கப் போகிறது. எங்கள் பக்கம் இருப்பவர்கள் அனைவரும் புடம் போட்ட தங்கங்கள் யாராவது ஒருத்தராவது அவர்கள் பக்கம் போய் இருக்கிறார்களா, அவர்கள் சொல்வது அனைத்துமே பொய்.

நான் 1980லேயே அரசியலுக்கு வந்தவன்
எனக்கு நன்றாகவே தெரியும், தினகரன் அரசியலுக்கு வந்த பிறகு என்ன சொன்னார், என்னை அறிமுகப்படுத்தியதே அவர்தான் என்றார். அவர் பெரியகுளத்திற்கு வந்தது 1998, நான் 1980 முதலே அரசியலில் இருக்கேன்.

பொய்யை வழக்கமாக கொண்ட தினகரன்
நான் தினகரனை விட 18 வருடம் சீனியர், இந்த 18 வருட அரசியலில் சாதாரண வார்டு பதவி, வார்டு செயலாளர், நகர துணை செயலாளர், நகர செயலாளர்,மாவட்ட எம்ஜிஆர் அணி செயலாளர், நகரத் தலைவர், மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர், அமைச்சர் அதன் பின்னர் ஜெயலலிதாவார் முதல்வரானேன். ஆக இத்தனை பதவிகளைத் தாண்டித் தான் நான் இந்த பொறுப்புக்கு வந்தேன், அவர் சொல்வதில் எவ்வளவு பொய் இருக்கிறது பாருங்கள்.

இன்னொரு முகம்
தினகரன் சொல்வது எல்லாம் அந்த நேரத்தில் ஏதாவது சொல்லி ஏமாற்ற வேண்டும் அந்த நிலையில் தான் அவர் பேசுவார். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி தினகரன் சொல்வார், என்னுடைய ஒரு முகத்தை தான் பார்த்திருப்பீர்கள், இன்னொரு முகம் பின்னால் இருக்கிறது அதை காட்ட மாட்டேன், நேரம் வரும் போது காட்டுவேன் என்பார்.

420 என தினகரனே ஒப்பு கொண்டிருக்கிறார்
மற்றொரு முறை பேசும் போது சொல்வார் நான் ஒரு 420 உங்களுக்குத் தெரியாது. போகப் போகத் தெரியும் என்று சொல்லி இருக்கிறார், இது உண்மை சத்தியவாக்கு என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications