நான் உள்ளே வரனும்னா சசிகலா கட்சியை விட்டு வெளியே போகனும்.. 'கறார்' ஓபிஎஸ்
சசிகலாவும் தினகரனும் அதிமுகவை விட்டு வெளியேறினால்தான் நாங்கள் இணைவோம் என ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னை: தாங்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டுமானால் சசிகலாவும் அவரது குடும்பமும் கட்சியைவிட்டு முதலில் வெளியேற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமான நிபந்தனையை விதித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலா சிறை கம்பிகளை எண்ணுகிறார். அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலர் தினகரனோ சிறை கம்பிகளை எண்ணப்போகிறார்.

இணைப்பு பேச்சு
இந்த நிலையில் அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. சசிகலா கோஷ்டி அமைச்சர்கள் அனைவருமே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஓபிஎஸ் கோஷ்டியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி வருகின்றனர்.

ஜெ. மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை
இது தொடர்பாக பெரியகுளத்தில் இன்று செய்தியாளர்களை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்பது எங்களது முதல் நிபந்தனை.

நோ சசிகலா அண்ட் கோ
இரண்டாவதாக சசிகலாவை பொதுச்செயலராக ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் என்பதை எங்களால் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.

சகிக்க முடியாது
டிடிவி தினகரனின் நடவடிக்கையால் அதிமுகவுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. இதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. சசிகலா குடும்பம் அதிமுகவை விட்டு வெளியேறினால்தான் நாங்கள் மீண்டும் இணைவோம் என திட்டவட்டமாக கூறினார் ஓபிஎஸ். சசிகலா அண்ட் கோ இல்லாத அதிமுகதான் என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருக்கிறார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications