'எனக்கு சுகேஷ் சந்திரா யார் என்றே தெரியாது' - அலட்டாமல் கூறும் தினகரன் - வீடியோ
தேர்தல் ஆணையம் முடக்கி வைத்திருக்கும் இரட்டை இலையை மீட்பதற்கு, லஞ்சம் கொடுத்த வழக்கில், செய்தியாளர்களிடம் 'எனக்கு சுகேஷ் சந்திரா யார் என்றே தெரியாது' என அலட்டாமல் கூறினார் தினகரன்.
சென்னை: 'நான் சுகேஷ் சந்திராவிடம் பேசினேனா? அவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது' என இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் செய்தியாளர்களின் கேள்விக்கு அலட்டாமல் பதில் சொன்னார் தினகரன்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராக ஒ.பன்னீர் செல்வம் பதவி வகித்தார். ஆனால் சசிகலா குடும்பத்தார் கொடுத்த நெருக்கடியால் பதவியை ராஜினாமா செய்தேன் என அவர் கூறினார். அன்றிலிருந்து அதிமுக சசிகலா அணி, ஒபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்தது.

அதன்பிறகு ஆர்கே நகர் தேர்தலில் சின்னம் யாருக்கு என இருதரப்பும் போட்டி போட, இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இந்நிலையில், அந்த சின்னத்தை மீட்பது குறித்தான விசாரணை இன்று தேர்தல் ஆணையத்தில் நடைபெறுகிறது. அதன் முடிவில் விரைவில் இரட்டை இலை யாருக்கு என்பது தெரிய வரும். இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என இடைத்தரகர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்துள்ளார்.
இந்த லஞ்சப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரசேகர், டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா ஆகியோரிடம் லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது டெல்லி குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்கள் தினகரனிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், சுகேஷ் சந்திரா யார் என்றே எனக்குத் தெரியாது. நான் அவரிடம் பேசினேனா? என பத்திரிகையாளர்களிடமே கேள்வி கேட்டார். மேலும் 'இந்த வழக்கை நான் சட்டப்படி சந்திப்பேன்' என கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications