அத்தையின் சொத்து பத்தெல்லாம் வேணாங்க.. அவரது அரசியல் வாரிசு நான்தான் என்ற அங்கீகாரமே போதும்.... தீபா
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான் என்ற அங்கீகாரம் கிடைத்தால் மட்டும் போதுமானது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான் என்ற அங்கீகாரம் கிடைத்தால் மட்டும் எனக்கு போதுமானது என்று தீபா தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அவரது அண்ணன் மகள் தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார். அதிமுகவை மீட்பதற்காகவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடவைத்து தீபாவை முதல்வராக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று அவரது கணவன் மாதவன் சூளுரைத்தார். ஆனால் அதற்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

கணவர்- மனைவி சண்டை
இதனிடையே கணவர்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தீபாவின் கணவர் மாதவன் தனிக்கட்சியை தொடங்கினார். இது பேரவை நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இத்தனை நாள்களாக அவ்வப்போது தீபா தலைகாட்டி வந்தார்.

தினகரன் மீது விமர்சனம்
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தினகரனை கதீபா கடுமையாக விமர்சித்தார். மேலும் அமைச்சர்கள் எல்லாம் மக்குசாமிகள் என்றும் விமர்சித்தார்.

போயஸ் தோட்டத்துக்கு வருகை
இதனிடையே தினகரன் மீது விமர்சித்த தீபாவை காவல் ஆய்வாளர் ஒருவர் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதால் கடுப்பாகிவிட்டார் தீபா. இதைத் தொடர்ந்து நேராக போயஸ் கார்டனுக்கு சென்றார். அது தமக்கு மட்டுமே சொந்தம் என்று வாதாடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீபா பேட்டி
இதுகுறித்து தீபா பேட்டி அளிக்கையில், ஜெயலலிதாவின் சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. எனக்கு வேண்டியதெல்லாம் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான் என்ற அங்கீகாரம் மட்டுமே போதுமானது.

அத்தையின் படத்துக்கு மாலை
தீபக் என்னை தொடர்பு கொண்டு கார்டனில் உள்ள அத்தையின் படத்துக்கு மாலை அணிவித்து விட்டு செல்வதற்காக வருமாறு கூறினார். முதலில் என்னை மட்டும் தான் வர சொன்னார். நான்தான் பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று பேரவை நிர்வாகி ராஜா உள்ளிட்டோருடன் சென்றேன்.

திமிராக பேசினான்
என்னை ஒரு இடத்தில் உட்காருமாறு தீபக் திமிராக பேசினார். எதற்கு என்று கேட்டதற்கு உனக்கு எந்த வேலையும் இல்லை உட்காரு என்றான். இது எனக்கு எரிச்சலை ஊட்டியது. என்னை திட்டமிட்டு தாக்கினான் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications