பேராசிரியர் நிர்மலா தேவியின் முகத்தை நான் இதுவரை பார்த்ததில்லை- ஆளுநர்
பேராசிரியர் நிர்மலா தேவியின் முகத்தை நான் இதுவரை பார்த்ததில்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: பேராசிரியர் நிர்மலா தேவியின் முகத்தை கூட நான் இதுவரை பார்த்ததில்லை என்றும் எனது பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவை கூட வர முடியாது என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவி , மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.

இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஒரு பேராசிரியர் இப்படி பேசியது பெற்றோர் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை அருப்புக்கோட்டை காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவனில் செய்தியாளர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழக ஆளுநராக 6 மாதங்கள் நிறைவு பெற்றுவிட்டது. மாணவிகளை பேராசிரியை தவறாக வழி நடத்திய சம்பவம் கண்டனத்துக்குரியது. நிர்மலா தேவி மீதும் அவர் பின்புலத்தில் உள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிர்மலா தேவி அவ்வாறு பேசியிருக்கக் கூடாது. சந்தானம் தலைமையிலான குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். அவர் ஒரு நேர்மையான அதிகாரி. கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் ஒரு மாதம் தாமதித்தது ஏன் என்பது விசாரிக்க வேண்டும்.
என்னை கேட்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் விசாரணைக்காக 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது. நிர்மலா தேவியின் விவகாரம் குறித்து துணைவேந்தருக்கும் இந்த விவகாரம் தெரிவிக்கப்படவில்லை.
நிர்மலா தேவியின் முகத்தை கூட நான் இதுவரை பார்த்ததில்லை. அவர் யாரென்றே எனக்கு தெரியாது. என் பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவை கூட என்னை நெருங்க முடியாது. சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை. எனக்கு 70 வயது ஆகிறது, எனக்கு பேத்தி அல்ல, கொள்ளு பேரன் பேத்திகள் உள்ளனர். எனவே உங்கள் வாயால் என்னை குற்றம்சாட்டாதீர்.
குற்றச்சாட்டு உறுதி செய்யும் பட்சத்தில் யார் குற்றவாளியாக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். பேராசிரியை விவகாரத்தில் காவல் துறை விசாரணை தொடரும் என்றார் ஆளுநர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications