For Daily Alerts
Just In
வருமான வரி வழக்கு: ஏப்ரல் 3ல் ஜெயலலிதா, சசிகலா ஆஜராக உத்தரவு!
கடந்த 1991 மற்றும் 1992ல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.
வழக்கை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை படித்துப் பார்க்க ஜெயலலிதா தரப்பு 3 வார காலம் அவகாசம் கோரியது.
ஜெயலலிதா தரப்பினரின் கோரிக்கையை ஏற்று நீதிபதி 2 வார காலம் அவகாசம் அளித்துள்ளார். ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
English summary
The Additional Chief Metropolitan Magistrate (ACMM) Court -I, Egmore on Thursday directed Chief Minister Jayalalithaa and her close aide, N. Sasikala to appear before it on April 3 in connection with income tax cases filed against them.
Story first published: Thursday, March 20, 2014, 13:33 [IST]