சட்டசபையில் நான் நினைத்தால் பெரும்பான்மையை எளிதாக நிரூபிப்பேன்..சசிகலா புஷ்பா பொளேர்
சட்டசபையில் தம்மால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்; அதிமுக எம்.எல்.ஏக்கள் தம்மையே ஆதரிப்பார்கள் என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபையில் தாம் நினைத்தால் பெரும்பான்மையை எளிதாக நிரூபிக்க முடியும் என்று அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா அதிரடியாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டவர் சசிகலா. அதேநேரத்தில் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக நாடாளுமன்ற செயலருக்கு அதிமுக கடிதம் அனுப்பவில்லை.
இதனால் தொடர்ந்தும் ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.யாக அவர் இருந்து வருகிறார். ஜெயலலிதா மறைந்தது முதலே சசிகலா குடும்பத்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வருகிறார் சசிகலா புஷ்பா.

அமைதியாக இருக்கும் சசிகலா புஷ்பா
ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியபோது அவருடன் சசிகலா புஷ்பாவும் கை கோர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 6 மாத காலமாக எந்த ஒரு கோஷ்டியிலும் இணையாமல் டெல்லிக்கும் தமிழகத்துக்குமாக பறந்து கொண்டிருக்கிறார் சசிகலா புஷ்பா.

யாரையும் மக்கள் ஏற்கவில்லை
இந்நிலையில் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய எந்த ஒரு தலைவருமே இல்லை. அதிமுக தற்போது 4 கோஷ்டிகளாக பிரிந்து நிற்கிறது.

நானும் மனு தாக்கல்
தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி பெயருக்கு உரிமை கோரி 4 கோஷ்டியும் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இதில் அதிமுக பொதுச்செயலர் தேர்தலின் போது நடந்த வன்முறைகளை சுட்டிக்காட்டி ஒரு மனு கொடுத்திருக்கிறேன்.

சட்டசபையில் பெரும்பான்மை
எனக்குப் பின்னால் எத்தனை எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என்பதைவிட நான் நினைத்தால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். ஆனால் இப்போது ராஜ்யசபா சபா எம்.பியாக பணியாற்றுகிறேன். இந்த பதவிகாலம் முடியும் வரை காத்திருக்கலாம் என நினைக்கிறேன்.

எனக்கு முக்கியத்துவம்
ஜெயலலிதா இருந்தபோதே அவருக்கு அடுத்த நிலையில் எனக்கு இடம் தந்திருந்தார். இன்று அதிமுக மூத்த நிர்வாகிகளாக இருப்பவர்கள், மூத்த அமைச்சர்கள் பலர் மீதான புகார்கள் குறித்து என்னைத்தான் விசாரிக்க சொல்லியிருந்தார். என் மீது நம்பிக்கை இருந்ததால்தான் நாடாளுமன்ற செயலருக்கு என்னை கட்சியில் இருந்து நீக்கும் அறிக்கையை அவர் அனுப்பி வைக்கவில்லை.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications