புதுச்சேரி அரசுடான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாம்.. சொல்கிறார் ஆளுநர் கிரண்பேடி
புதுச்சேரி: எனக்கும் புதுச்சேரி அரசுக்கும் இருந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டது என அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்புக்கு பஞ்சம் வைக்காமல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கிரண்பேடியின் அதிரடி நடவடிக்கைகளால் ஆளும் கட்சியான காங்கிரஸ் அதிர்ந்து போயுள்ளது. இதனிடையே முதல்வர் நாரயணசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் கிரண்பேடி. இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது.
காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கிரண்பேடி செயல்பட்டு வருவதாக முதல்வர் நாராயணசாமி நேற்று குற்றம்சாட்டியிருந்தார். முதல்வர் அதிகாரத்தை குறைக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இஸ்லாமியர்களுக்கு கிரண்பேடி இன்று இப்தார் விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சியை முதல்வர் உட்பட புதுச்சேரி எம்எல்ஏக்கள் அனைவரும் புறக்கணித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் கிரண்பேடி, முதல்வரின் நிதி அதிகாரத்தை எந்த வகையிலும் குறைக்கவில்லை. நிதி அதிகாரத்தில் நான் தலையிடுகிறேன் எனக் கூறுவது பொய்யான தகவல் எனக் கூறினார். மேலும் அரசுக்கும் எனக்கும் இருந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டது என்றார். முதல்வரும் ஆளுநரும் இணைந்து செயல்படுவார்களா அல்லது மீண்டும் எதாவது குழப்பத்தை ஏற்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications