நீதிபதி ரகுபதி என்ன சூப்பர் ஹீரோவா?: கொந்தளித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி!

சென்னை மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியாகினர். இது குறித்து தமிழக அரசு முன்னாள் நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை நியமித்துள்ளது.
ஆனால் திமுக பொருளாளர் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 4-ந் தேதி தலைமை நீதிபதி கவுல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது மு.க.ஸ்டாலின் சார்பில் வழக்கறிஞர்கள் அரவிந்தன், பரந்தாமன்ம் பிரசன்னா ஆகியோர் ஆஜராகினர். வழக்கறிஞர் வில்சன் இவர்களுக்காக வாதிட்டார்.
அப்போது ஸ்டாலின் தரப்பில், மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் நியாயமான விசாரணை நடைபெற சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால் தமிழக அரசு தரப்பில் ஆஜரான சோமயாஜியோ, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றார்.
இதற்கு பதிலடியாக திமுக தரப்பில், நீதிபதி ரகுபதி பல விசாரணை கமிஷன்களில் உறுப்பினராக இருக்கிறார். நுகர்வோர் நீதிமன்றம், குண்டர் தடுப்பு சட்ட அமைப்புகளில் இருக்கிறார் என்று சுட்டிக்காட்டினர்.
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் கூறியது:
- ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளன.
- நுகர்வோர் தீர்ப்பாணையத் தலைவராகவும், குண்டர் தடுப்புச்சட்ட ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் நீதிபதி ரகுபதி இருக்கிறார்.
- மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கும் நீதிபதி ரகுபதியையே நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?
- ஏற்கெனவே பல பொறுப்புகளை வகித்து வரும் நிலையில் இதற்கும் ரகுபதியை நியமித்தது ஏன்?
- அப்படி என்ன ரகுபதி ஒரு சூப்பர் ஹீரோவா?
- இதுவரை ரகுபதியிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் என்ன?
- நீதிபதி ரகுபதி உறுப்பினராக உள்ள விசாரணை கமிஷன்கள், நுகர்வோர் தீர்ப்பாணையத்தில் அவர் முன் நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன?
- இதுகுறித்து நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
- இந்த வழக்கின் விசாரணைக்கு வரும் 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications