சென்னையில் சசிகலா குடும்ப பினாமியின் ரூ380 கோடி சொத்து முடக்கம்?
சென்னையில் சசிகலா குடும்ப பினாமியின் ரூ380 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளது.
சென்னை: சசிகலா குடும்பத்தின் பினாமிக்கு சொந்தமான ரூ380 கோடி சொத்தை சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருமான வரித்துறையின் இந்நடவடிக்கையால் தினகரன் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் வீடுகள், நிறுவனங்களில் ஒரே நேரத்தில் வரலாறு காணாத மிகப் பெரும் வருமான வரி சோதனையை அண்மையில் அதிகாரிகள் நடத்தினர். அதில் ரூ4,000 கோடிக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

போலி நிறுவனங்கள், பினாமிகள் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை சசிகலா குடும்பம் வாங்கி குவித்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இச்சொத்துகள் தொடர்பாக் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் ஆதி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ரூ 380 கோடி ரூபாய் மதிப்பிலான 4.3 ஏக்கர் ஃபிர்ஹெவன் எஸ்டேட்டை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். குஜராத்தின் சுனில் கெட்பாலியா, மனீஷ் பார்மர் ஆகியோருக்கு இந்த எஸ்டேட் சொந்தமானது.
இவர்கள் சசிகலா குடும்பத்தின் பினாமி என கருதுகிறது வருமான வரித்துறை. ஆதி எண்டர்பிரைசஸ் பணப் பரிமாற்றத்தை மட்டுமே நடத்தி வந்ததால் கருப்பு பணத்தை மாற்றும் நிறுவனமாக இது செயல்பட்டிருக்கிறது. ஆகையால் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
வருமான வரித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை தினகரன் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications