போயஸ் தோட்டத்தை விடாமல் துரத்தும் வருமான வரித் துறை அதிகாரிகள்... அச்சத்தில் சசிகலா அன்ட் கோ?
போயஸ் கார்டன் இல்லத்தில் மீண்டும் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மீண்டும் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதனால் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகாலம் போயஸ் தோட்டத்திலும் ஜெ.வின் நிழல் போலவும் வாழ்ந்தவர் சசிகலா. இவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ளார். தமிழக அரசியலில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து விட்ட நிலையில் கடந்த மாதம் சசிகலாவின் உறவினர் வீடு மற்றும் அலுவலகத்தில் மாபெரும் ரெய்டு நடத்தப்பட்டது.

அதிகாரிகள் 5 நாட்கள் ரெய்டு
தமிழகம் முழுவதும் 197 இடங்களில் ஐடி துறையினர் ரெய்டு நடத்தினர். திருமண கோஷ்டி போல் மணமக்களின் பெயர் ஸ்டிக்கரை ஒட்டி கொண்டு ரெய்டு நடத்தினர். குறிப்பாக விவேக் ஜெயராமன் வீடு, திவாகரன் வீடு, கல்லூரி, கிருஷ்ணப்பிரியாவின் வீடு, தினகரனின் பண்ணை வீடு, ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகம் என ரெய்டு சுமார் 5 நாட்களுக்கு நீடித்தது.

ரூ.1770 கோடி மதிப்பிலான சொத்துகள்
ஐடி அதிகாரிகள் நடத்திய ரெய்டில் ரூ. 1770 கோடி மதிப்பிலான சொத்துகள், நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரிடமாக அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரித்து வந்தனர்.

சசிகலாவின் அறை
இந்த ரெய்டுகள் முடிந்த சில நாட்களில் வருமான வரித் துறையினர் போயஸ் கார்டனில் நள்ளிரவில் ரெய்டு சென்றனர். அங்கு சசிகலா வாழ்ந்த 4 அறைகளிலும், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறையிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஒரு வேன் முழுக்க ஜெ.வுக்கு வந்த கடிதங்கள், பென் டிரைவ்கள், லேப்டாப்கள் என அள்ளிச் சென்றனர்.

12 இடங்களில் மீண்டும் ரெய்டு
மாபெரும் ரெய்டின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மதுபான தொழிற்சாலை, இளவரசியின் மருமகன் கார்த்திகேயனுக்கு சொந்தமான அடையாறு இல்லம், படப்பையில் உள்ள சாயி நிறுவனம் உள்ளிட்ட 12 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் இன்று போயஸ் தோட்டத்தில் பழைய ஜெயாடிவி அலுவலகத்திலும் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்திலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதனால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications