மக்களால் இந்த அரசு, மக்களுக்காகவே இந்த அரசு... மறந்துவிட்டதா?.. தீபா கேள்வி
மக்களால் இந்த அரசு, மக்களுக்காகவே இந்த அரசு என செயல்பட்டதை நினைவில் கொண்டு போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என ஜெ.தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் இந்த போராட்டத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து டுவிட்டரில் ஜெ.தீபா தனது பதிவில் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக போக்குவரத்து தொழிலாலர்களின் போராட்டத்தால் தமிழகத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் ஏழை, எளிய மக்கள், பல்லி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக ஓட்டுநர்கள் நியமித்தல் போன்ர முடிவுகளால் ஆங்காங்கே சில விபத்துகளும், சரிவர பேருந்தை இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
— J.Deepa (@JDeepaOfficial) January 10, 2018
நிலுவையில் உள்ள தொகையை வழங்க விரைந்து செயல்பட்டு, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை அரசு விரைந்து முடித்து வைக்க வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அடிப்படை தேவையான பயணத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை களைய வேண்டும்.
ஜெயலலிதாவின் அரசு என அடிக்கடி இந்த அரசு கூறும் போது அவர் எப்போதும் மக்களால் இந்த அரசு, மக்களுக்காகவே இந்த அரசு என செயல்பட்டதையும் நினைவில் வைத்து துரிதமாக செயல்பட்டு பண்டிகை நாட்களில் போக்குவரத்து தொழிலாளர்களையும் பொதுமக்களையும் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் இருக்கச் செய்ய வேண்டும் என்று ஜெ. தீபா தனது பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications