ஜல்லிக்கட்டு: 3 நாளை விடுங்க, 3 வருஷமா என்ன செஞ்சீங்க.. ஓபிஎஸ்- ஸ்டாலின் சட்டசபையில் மல்லுக்கட்டு!
ஜல்லிக்கட்டுக்காக 3 நாட்களில் சட்டம் கொண்டு நிறைவேற்றியவர்கள் மூன்றாண்டுகளாக ஏன் செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கேள்வி எழுப்ப, அதற்கு முதல்வர் ஓபிஎஸ் பதில் கொடுக்க காரசார விவாதம் நடைபெற்
சென்னை: சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்த உடன் விவாதங்கள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு தொடர்பான விவாத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை இருந்தது. நாங்கள் அதனை நடத்திக் காட்டினோம் என்றார்.
மேலும் அவர் மூன்று நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டு அந்த சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதை ஏன் மூன்று ஆண்டுகளாக நிறைவேற்ற முடியவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த மூன்று ஆண்டுகளாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சியால்தான் தற்போது அது சட்டமாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
சட்டசபையில் திமுக உறுப்பினர் மூர்த்தி ஜல்லிக்கட்டு தடை குறித்து பேசினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக காலத்தில் ஜல்லிக்கட்டு தடை நீக்க சட்டம் கொண்டு வந்தாலும் குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெறாததால் அதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது. எனவேதான் பாரம்பரிய உரிமையை மீட்க குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்றார்.
இந்த விவகாரம் தொடர்பான விளக்கத்தை அவையில் முன்னதாகவே கொடுத்து விட்டேன். உறுப்பினர்கள் விளக்கம் தேவையெனில் அதை படித்துக்கொள்ள வேண்டும் என்றும் ஓபிஎஸ் கூறினார்.
உடனே குறுக்கிட்டுப் பேசிய மு.க.ஸ்டாலின், மூன்று நாட்களில் அவசரச் சட்டத்தை நிறைவேற்றிய அரசு, மூன்று ஆண்டுகளாக ஏன் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி மேற்கொள்ளவில்லை என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், திமுக கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படவில்லை. அதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்தன் விளைவாக மூன்றே நாட்களில் வரலாற்று சிறப்புமிக்க அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது என விளக்கமளித்தார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக முதல்வருக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நடந்த காரசார விவாதத்தால் சட்டசபை பரபரப்பாக காணப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications