ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை: பிரதமரிடம் பேசுமாறு பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெற பிரதமரை நேரில் சந்தித்து, தேவையான நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எடுப்பார் என திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணனுக்கு, கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உறுதியாக நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அதில், கலைஞர் தொலைக்காட்சியில், ‘ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி நடத்த எந்த வகையிலாவது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று நீங்கள் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.
தமிழர் திருநாள், பொங்கல் நாள், புத்தாண்டு தொடக்கம் என்பதையொட்டி தமிழர்களின் பண்டைய வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தில் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருவதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 2007ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நீதி மன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு போட்டிகள் அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட்டன. அதைப்போலவே 2008ம் ஆண்டும் தி.மு.க. அரசால் முழு வீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உச்சநீதிமன்றம் விதித்திருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

2009ம்ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நெறிப்படுத்துவதற்கென சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு, தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இந்த நிலையில் தாங்களே பிரதமரை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு எந்தவிதமான இடையூறுமின்றி இந்த ஆண்டும் நடைபெறத் தேவையான முயற்சிகளை எல்லாம் உடனடியாக எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications