ஒரே நேரத்தில் மருத்துவமனையில் ஜெயலலிதா - கருணாநிதி.. கவலையில் தமிழகம்!
தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் தமிழக மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைவர்களான திமுக தலைவர் கருணாநிதியும், முதல்வர் ஜெயலலிதாவும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பில் உள்ள முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 மாதத்திற்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எப்போது வருவார் என்பதே தெரியவில்லை. அதில் பல குழப்பங்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன.
இந்த நிலையில் எதிர்க்கட்சி வரிசையில் முக்கியத் தலைவரான கருணாநிதி கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். தற்போது அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு தலைவர்கள்
தமிழக அரசியலைப் பொறுத்தவரை கருணாநிதியும், ஜெயலலிதாவும்தான் முக்கிய அச்சுக்கள். இவர்களைச் சுற்றித்தான் மொத்த அரசியலும் இருந்து வருகிறது.

அடுத்தடுத்து சுகவீனம்
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 23ம் தேதி இரவு உடல் நிலை பாதிப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருணாநிதிக்கு ஒவ்வாமை
இதேபோல திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாக கடந்த அக்டோபர் 25ம் தேதி திமுக தரப்பில் அறிவிப்பு வெளியானது.

தொடர் சிகிச்சையில் ஜெ. கருணாநிதி
ஜெயலலிதாவும் தொடரந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். கருணாநிதியும் வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை போதாத நிலையில்தான் ஜெயலலிதாவும், தற்போது கருணாநிதியும் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கவலையில் தமிழகம்
இப்படி இரு பெரும் அரசியல் தலைவர்களும் அடுத்தடுத்து சுகவீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்ற வேண்டுதலில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications