அரசியலுக்கு அழைக்கும் தொண்டர்களிடம் கருத்து கேட்கிறார் தீபா.. பக்காவாக ரெடியாகிறார்!
என்னை எதற்காக அரசியலுக்கு அழைக்கிறீர்கள், ஏன் அதிமுகவின் புதிய தலைமையை எதிர்க்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை கேட்டு அதிமுக தொண்டர்கள் மன ஓட்டத்தை தீபா கணித்து வருகிறார்.
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றுள்ளார். ஆனால், சசிகலா தலைமையை அதிமுகவின் பல லட்சம் தொண்டர்கள் ஏற்கவில்லை என தெரிகிறது. சசிகலாவுக்கு மாற்றாக தொண்டர்கள் ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவை கட்சியின் தலைமை பதவி வகிக்க அழைக்கிறார்கள்.
சென்னை தி.நகரில் உள்ள சிவஞானம் சாலையிலுள்ள தீபா வீட்டுக்கு தினமும் அதிமுக தொண்டர்கள் வந்து தீபாவை அரசியலுக்கு அழைக்கிறார்கள். இன்றும் தீபா வீட்டு முன்பு அதிமுக தொண்டர்கள் பெருமளவுக்கு குவிந்தனர்.

ஆனால், பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்து பத்திரிகையாளராக பணியாற்றியுள்ள தீபா அறிவுப்பூர்வமாக அடித்த அடியை எடுத்து வைக்க நினைக்கிறார். எடுத்தோம் கவிழ்த்தோம் என அரசியலில் குதிக்க தீபா விரும்பலில்லை.
தனக்கு உண்மையிலேயே ஆதரவு உள்ளதா, வீட்டு முன்பு வந்து உருகும் தொண்டர்களை நம்பி களமிறங்க முடியுமா என்பது குறித்து புள்ளி விவர கணக்குகளை அவர் எடுத்து வருகிறாராம். இதற்காக தீபா வீட்டில் பதிவேடு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் தொண்டர்களின் ஊர், பெயர் விவரங்கள் அதில் குறிக்கப்படுகிறது.
சென்னையில் மட்டும்தானா அல்லது வேறு எந்தெந்த மாவட்டங்கள் வரையில் தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள தீபா ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக அவர் புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறார். ஜெயலலிதா இறந்து 30 நாட்கள் வரையில் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்க கூடாது என பொறுமை காத்த தீபா இனிமேல் வேகம் காட்டுவார் என கூறப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று அவரது இல்லம் வந்திருந்த தொண்டர்களில் சிலரிடம் தனியாக அழைத்து கருத்து கேட்டுள்ளார். இனியும் தொடர்ந்து இதுபோல கருத்து கேட்பார் என தெரிகிறது. என்னை எதற்காக அரசியலுக்கு அழைக்கிறீர்கள், ஏன் அதிமுகவின் புதிய தலைமையை எதிர்க்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை கேட்டு அதிமுக தொண்டர்கள் மன ஓட்டத்தை தீபா கணித்து வருகிறார்.
தீபாவுக்கு சுமார் 25 லட்சம் அதிமுக தொண்டர்கள் ஆதரவு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதி செய்வதில் தீபா முனைப்பு காட்டுகிறார். ஆழம் தெரியாமல் காலை விட்டு அவமானப்படக்கூடாது என்பதில் தீபா ஜாக்கிரதையாக உள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications