ஸ்ரீரங்கத்தில் ரூ.43 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி- நேரில் சென்று ஜெ. திறந்து வைக்கிறார்
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் ரூ.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைக்க முதல்வர் ஜெயலலிதா இம்மாத இறுதியில் அங்கு செல்லவிருக்கிறார்.
உலக அளவில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள சிற்பக் கலைகளைப் பற்றி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சிறந்த ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீரங்கத்திலேயே தங்கி ரங்கநாதர், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, சமயபுரம் மாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில் ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் தங்கும் விடுதியான யாத்திரிகா நிவாஸ் கட்டப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி ஸ்ரீரங்கத்தில் இதற்கான அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து ஸ்ரீரங்கம் மேலூர் அருகே உள்ள பஞ்சக்கரை கொள்ளிடம் ஆற்றங்கரையில் திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் 2 லட்சம் சதுர அடியில் ரூ.43 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய எழில்மிகு பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
இங்கு 1000 பக்தர்கள் தங்கும் வகையில் கட்டில்கள், லாக்கருடன் கூடிய மிகப் பெரிய கூடமும், 25 ஏசி மற்றும் ஏசி அல்லாத தனி அறைகள் கட்டப்பட்டுள்ளது.
மேலும், 100 இரட்டை படுக்கைகள் கொண்ட அறைகள் பாதுகாப்பு பெட்டகம், உணவு கூடம், குளியல் அறைகள், கழிப்பறைகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், நடை பயிற்சி மேற்கொள்ள தனி பகுதி என பல்வேறு வசதிகளுடன் கூடிய பல்நோக்கு வளாகமாக கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்மாத இறுதியில் யாத்திரிகா நிவாஸை ஜெயலலிதா திறந்து வைக்க உள்ளார்.
ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் தனது தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்பட்டுத்தி வருகின்றார். மேலும், ஒவ்வொரு முறையும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதுவரை 4 முறை ஸ்ரீரங்கம் வந்துள்ள ஜெயலலிதா தற்போது 5வது முறையாக அந்த தொகுதிக்கு வரவிருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications