சமையல் கேஸ் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…மானிய திட்டத்தில் சேர 3 நாட்களே பாக்கி!
சென்னை: சமையல் எரிவாயு மானிய திட்டத்தில் சேர 30-ந் தேதி இறுதி நாளாகும்.
மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் நாடு முழுவதும் ஜனவரி 1-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் ஒரு கோடியே 53 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இவற்றில் சுமார் ஒரு கோடியே 38 லட்சம் வாடிக்கையாளர்கள் நேரடி மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர். இது 89.6 சதவீதமாகும்.

இதில் அதிகபட்சமாக திருச்சியில் 91.65 சதவீதமும், குறைந்தபட்சமாக கடலூரில் 88 சதவீத பேரும் சேர்ந்துள்ளனர். இன்னும் 15 லட்சம் பேர் இந்த திட்டத்தில் சேராமல் உள்ளனர்.
சமையல் எரிவாயு நேரடி மானியத்திற்கான கால அவகாசம் மார்ச் 31-ந் தேதியுடன் முடிந்து விட்டது. எனவே நேரடி மானியத் திட்டத்தில் சேராத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் மானியம் அல்லாத விலையில் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.
அதாவது எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயிக்கும் மானியம் இல்லாத விலையில் மட்டுமே ரசீதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் நேரடி மானிய திட்டத்தில் சேராதவர்களுக்கு வரும் 30-ந் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கெடு முடிய இன்னும் 3 வேலை நாட்கள் மட்டுமே உள்ளன. 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு முன் வைப்புத்தொகை ரூ.568 மற்றும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான மொத்த மானியத் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.
ஜூன் 30-ந் தேதிக்கு பின்னரும் இந்த திட்டத்தில் சேர முடியும். ஆனால் அவ்வாறு இணைபவர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான மானியம் கிடைக்காது. வாடிக்கையாளர்கள் எப்போது இந்த திட்டத்தில் இணைகிறார்களோ அந்த மாதம் முதல் மானியத் தொகை வழங்கப்படும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications