இலை, தழையுடன் வந்து பழங்குடியினர் போராட்டம்
தென்காசி: தென்காசி கோட்டஆட்சிதலைவர் அலுவலகத்தை இலை, தழைகளை உடலில் கட்டியபடி வந்து பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தினர்.
தென்காசி வட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பழங்குடியினத்தை சார்ந்த காட்டு நாயக்கன் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜாதிசான்றிதழ் இல்லாமல் தங்களது குழந்தைகளை 10ம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்க முடியாமல் கூலி வேலைக்கு அனுப்பி வருகின்றனர்.
தங்களைப் போல் அல்லாமல் தங்களது குழந்தைகளாவது நல்ல முறையில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செங்கோட்டை, தென்காசி தாலுகா அலுவலகங்களில் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்து பல மாதங்கள் அலையாய் அலைந்தும் அதிகாரிகள் இந்த ஜாதி இங்கு இல்லை என்று கூறி இவர்களுக்கு ஜாதி சான்றிதழ்களை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இம்மக்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிமன்றமும் இவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டும் அதிகாரிகள் வழங்கவில்லை. இதனைக் கண்டித்து ஏற்கனவே சாலைமறியல் போராட்டத்தை கம்யூ.கட்சி நடத்தியது. அப்படியிருந்தும் இவர்களுக்கு நீதி கிடைத்த பாடில்லை.
இந்நிலையில் இன்று இந்த இன மக்கள் சுமார் 100க்கும் மேற்ப்பட்டோர் குழந்தைகளுக்கு இலை,தழைகளை உடலில் கட்டி தென்காசி கோட்டாட்சி தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது பரப்பரப்பு உருவானது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சுமார் 50ஆண்டு காலமாக எங்கள் வாழ்க்கை சாலைகளில் குப்பையை பொறுக்கி குடும்பத்தை ஒட்டி வருகிறோம். எங்களது குழந்தைகளாவது படிக்கட்டும் என்று பள்ளிக் கூடம் அனுப்பினால் ஜாதி சான்றிதழ் தடையாய் உள்ளது.
வேறு ஜாதியினர் எங்கள் ஜாதி பெயரில் சான்றிதழ் கலை வாங்கும் நிலை செங்கோட்டையில் உள்ளது. தமிழக அரசு எங்கள் மீது கருணை கொண்டு ஜாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications