காவிரி விவகாரத்தில் எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும்- கமல்
Recommended Video

ஈரோடு: காவிரி விவகாரத்தில் எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். ஈரோட்டில் இன்று கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவிரி விவகாரத்தில் சுமூக நிலை எட்டப்படாவிட்டால் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும். சினிமாவில் கிடைத்துள்ள புகள் அரசியலுக்கு போதாது.
சிலைகளை வைப்பதிலேயே வித்தியாசமான கருத்துடையவன் நான். அதிலும் வைத்த சிலையை இடிப்பது என்பது தவறு. பெரியார் இருந்திருந்தாலும் தனக்கு சிலை வைப்பதை அவர் விரும்ப மாட்டார்.
மதியம் 12 மணிக்கு கூட நடந்து செல்லமுடியாது நிலையில் பெண்கள் பாதுகாப்பு உள்ளது. ஜிஎஸ்டி விவகாரத்தில் திரைத்துறையில் இருந்து எனது குரல்தான் முதலில் வந்தது.
வைகோ நன்கு அரசியல் பேச கூடியவர். அவருக்கு நான் எதையும் கற்று தர முடியாது என்றார் கமல்.












Click it and Unblock the Notifications