நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே.. மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் பழகு.. கமல் டுவிட்
முரசொலி பவளவிழாவில் பங்கேற்றுச் சென்ற சூட்டோடு நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை: புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே என்று நடிகர் கமல் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இரவானால் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்வதை நடிகர் கமல் வாடிக்கையாக வைத்துள்ளார். அப்படிப் பல டுவிட்டுகள் தமிழகத்தில் நடக்கும் ஆட்சிக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் இருந்தன. இதனால் தொடர்ந்து அமைச்சர்கள் கமலை விமர்சனம் செய்தாலும், அதற்கும் பதில் சொல்லியே வருகிறார் கமல்.

அந்த வகையில் இன்றும் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே. ஓடி எனைப் பின் தள்ளாதே. களைத்தெனைத் தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்" என்று பதிவிட்டுள்ளார் கமல்.
இதனைத் தொடர்ந்து, சற்று நேரத்திற்கெல்லாம் மற்றொரு டுவிட்டையும் பதிவிட்டுள்ளார் கமல். அதில், "புரிந்தவர் புரியாதோருக்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் பழகு. தேசியமும் தான்" என்று கூறியுள்ளார்.
திமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடான முரசொலி பவள விழா நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிய சூட்டோடு இந்தப் பதிவை கமல் டுவிட்டரில் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications