பள்ளி மாணவர்கள் கையில் சாதிக்கயிறுகள்! அரசுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த காமராஜர் பேத்தி!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பள்ளி மாணவர்கள் கையில் வண்ணங்களிலான சாதிக்கயிறுகளை கட்ட தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு காமராஜர் பேத்தி கமலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்குநேரியில் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டிய அவர் இது போன்ற ஒரு சம்பவம் இனியும் தமிழ்நாட்டில் தொடரக்கூடாது என்ற அக்கறையில் இந்தக் கோரிக்கையை வைப்பதாக தெரிவித்துள்ளார். சாதி என்பதே இருக்கக் கூடாது என்பது தான் தனது தனிபட்ட கருத்து என்றும் கூறினார்.

Kamali kamaraj has appealed to the government to ban tying colored Community ropes on the hands of school students

பள்ளி மாணவர்கள் கையில் அவரவர் சாதியை அடையாளம் கூறும் விதமாக பல வண்ணங்களில் கயிறுகள் கட்டி வருகிறார்கள் என்றும் இதனை கவனத்துடன் கையாண்டு சாதிக்கயிறுகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சாதிக்கயிறுகள் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், முதலமைச்சர் ஸ்டாலினும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக காமராஜர் பேத்தி கமலி தெரிவித்துள்ளார். கமலி காமராஜ தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருப்பதும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சீட் எதிர்பார்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் நெல்லை மக்களவைத் தொகுதியை கமலிகா காமராஜ் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் நெல்லையை மையமாக வைத்து அரசியல் பணிகளில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

நாங்குநேரியில் அரிவாள் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சின்னத்துரை என்ற மாணவனையும் அவரது சகோதரியையும் நேரில் சென்று பார்த்த பின்னர் சாதிக்கயிறு குறித்த பேட்டி கொடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+