விரட்டும் இன்டர்போல்... துபாயிலிருந்து மலேசியாவுக்குத் தப்பினார் "டான்" ஸ்ரீதர்
கொலை, கொள்ளை, நில அபகரிப்பு ஆகிய தொழில்களில் கைதேர்ந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தாதா ஸ்ரீதர் மலேசியாவுக்கு தப்பி விட்டார்.
காஞ்சிபுரம்: கொலை, கொள்ளை, நில அபகரிப்பு ஆகிய தொழில்களில் வல்லவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தாதா ஸ்ரீதர் மலேசியாவுக்கு தப்பி ஓடிவிட்டார்.
காஞ்சிபுரத்தில் உள்ள திருபருத்திகுன்றத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (46). சாராய தொழிலில் கொடி கட்டி பறந்தவர். இதுமட்டுமல்லாமல் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, சொத்துக்களை அபகரித்தல் ஆகிய தொழில்களும் இவருக்கு முக்கியமானவை.
இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் அவர் மீது நிலுவையில் உள்ளது. ஏற்கெனவே ஸ்ரீதர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

என்கவுன்ட்டருக்கு பயம்
போலீஸாரின் என்கவுன்ட்டருக்கு பயந்து துபாய்க்கு தப்பி சென்றார். அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகள் மூலம் காஞ்சிபுரத்தில் கொலை, கொள்ளை, சொத்து அபகரிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரை கைது செய்ய போலீஸார் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர்.

சொத்துகள் முடக்கம்
ஸ்ரீதரின் மனைவி, மகள், தம்பி மற்றும் கூட்டாளிகள் பெயரில் வாங்கிய சொத்துகளை முடக்க வேண்டும் என காஞ்சிபுரம் போலீஸார், அமலாக்கத் துறைக்கு பரிந்துரைத்தனர். அதன்படி சென்னை மண்டல அமலாக்கத் துறை பரிந்துரைத்தது. அதன்படி சென்னை மண்டல அமலாக்கத் துறை அதிகாரிகள் ஸ்ரீதரின் ரூ.160 கோடி சொத்துகளில் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கினர்.

சப்-கலெக்டர் மகன் கொலை
எனினும் ஸ்ரீதர் துபாயில் இருந்தபடி தனது கூட்டாளிகள் மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, சொத்து பறிப்பு ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் சப்- கலெக்டர் மகன் கொலை, அவரது சொத்துகள் பறிப்பு ஆகியவற்றிலும் ஸ்ரீதருக்கு தொடர்பு இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.

துபாய் போலீஸ் உதவி
ஸ்ரீதரை கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஏடிஎஸ்பி ஸ்ரீநாத் தலைமையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, துபாய் போலீஸார் உதவியுடன் ஸ்ரீதரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதனை, தனது கூட்டாளிகள் மூலம் அறிந்த ஸ்ரீதர், துபாயில் இருந்து மலேசியாவுக்கு தப்பிச் சென்று பதுங்கியிருப்பதாக காஞ்சிபுரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

மலேசியாவுக்கு ஓட்டம்
மலேசியாவில் அவர் யார் கட்டுப்பாட்டில் உள்ளார். அவருக்கு உதவி செய்பவர்கள் யார் உள்ளிட்டவை குறித்து, தமிழக உள்துறை, மத்திய உள்துறை மூலம் சர்வதேச போலீஸாரின் உதவியை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாரும் அமலாக்கத் துறையும் நாடி உள்ளனர். பல ஆண்டாக வெளிநாட்டில் இருந்தபடி தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல தாதா ஸ்ரீதரை கைது செய்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல குற்றச் சம்பவங்களில் துப்பு துலங்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications