விரட்டும் இன்டர்போல்... துபாயிலிருந்து மலேசியாவுக்குத் தப்பினார் "டான்" ஸ்ரீதர்
கொலை, கொள்ளை, நில அபகரிப்பு ஆகிய தொழில்களில் கைதேர்ந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தாதா ஸ்ரீதர் மலேசியாவுக்கு தப்பி விட்டார்.
காஞ்சிபுரம்: கொலை, கொள்ளை, நில அபகரிப்பு ஆகிய தொழில்களில் வல்லவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தாதா ஸ்ரீதர் மலேசியாவுக்கு தப்பி ஓடிவிட்டார்.
காஞ்சிபுரத்தில் உள்ள திருபருத்திகுன்றத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (46). சாராய தொழிலில் கொடி கட்டி பறந்தவர். இதுமட்டுமல்லாமல் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, சொத்துக்களை அபகரித்தல் ஆகிய தொழில்களும் இவருக்கு முக்கியமானவை.
இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் அவர் மீது நிலுவையில் உள்ளது. ஏற்கெனவே ஸ்ரீதர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

என்கவுன்ட்டருக்கு பயம்
போலீஸாரின் என்கவுன்ட்டருக்கு பயந்து துபாய்க்கு தப்பி சென்றார். அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகள் மூலம் காஞ்சிபுரத்தில் கொலை, கொள்ளை, சொத்து அபகரிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரை கைது செய்ய போலீஸார் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர்.

சொத்துகள் முடக்கம்
ஸ்ரீதரின் மனைவி, மகள், தம்பி மற்றும் கூட்டாளிகள் பெயரில் வாங்கிய சொத்துகளை முடக்க வேண்டும் என காஞ்சிபுரம் போலீஸார், அமலாக்கத் துறைக்கு பரிந்துரைத்தனர். அதன்படி சென்னை மண்டல அமலாக்கத் துறை பரிந்துரைத்தது. அதன்படி சென்னை மண்டல அமலாக்கத் துறை அதிகாரிகள் ஸ்ரீதரின் ரூ.160 கோடி சொத்துகளில் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கினர்.

சப்-கலெக்டர் மகன் கொலை
எனினும் ஸ்ரீதர் துபாயில் இருந்தபடி தனது கூட்டாளிகள் மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, சொத்து பறிப்பு ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் சப்- கலெக்டர் மகன் கொலை, அவரது சொத்துகள் பறிப்பு ஆகியவற்றிலும் ஸ்ரீதருக்கு தொடர்பு இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.

துபாய் போலீஸ் உதவி
ஸ்ரீதரை கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஏடிஎஸ்பி ஸ்ரீநாத் தலைமையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, துபாய் போலீஸார் உதவியுடன் ஸ்ரீதரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதனை, தனது கூட்டாளிகள் மூலம் அறிந்த ஸ்ரீதர், துபாயில் இருந்து மலேசியாவுக்கு தப்பிச் சென்று பதுங்கியிருப்பதாக காஞ்சிபுரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

மலேசியாவுக்கு ஓட்டம்
மலேசியாவில் அவர் யார் கட்டுப்பாட்டில் உள்ளார். அவருக்கு உதவி செய்பவர்கள் யார் உள்ளிட்டவை குறித்து, தமிழக உள்துறை, மத்திய உள்துறை மூலம் சர்வதேச போலீஸாரின் உதவியை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாரும் அமலாக்கத் துறையும் நாடி உள்ளனர். பல ஆண்டாக வெளிநாட்டில் இருந்தபடி தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல தாதா ஸ்ரீதரை கைது செய்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல குற்றச் சம்பவங்களில் துப்பு துலங்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications