பேச்சுரிமைக்கு புது இலக்கணம் கற்பிக்கிறது பாஜக... கபில் சிபில் பொளேர்!
பேச்சுரிமைக்கு பாஜக புதிய இலக்கணத்தை கற்பிக்கிறது என்று முன்னாள் அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபில் குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை : பேச்சுரிமைக்கு புதிய இலக்கணத்தை கற்பிக்கும் பாஜக தான் எது சரி, தவறு என்பதை தீர்மானிக்குமா? என்று முன்னாள் அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபில் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மெர்சல் திரைப்பட விவகாரம் தமிழக அரசியலைத் தாண்டி தேசிய அரசியலிலும் விவாதத்திற்கு ஆளாகியுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மிஸ்டர் மோடி திரைப்படம் என்பது தமிழ் மொழி கலாச்சாரத்தின் வெளிப்பாடு. மெர்சல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழின் மதிப்பை குலைக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவரைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபிலும் டுவிட்டரில் மெர்சலுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.
BJP to decide what is wrong or right for us:a new definition of free speech.Vijay in Mersal has every right to criticise GST,Digital India.
— Kapil Sibal (@KapilSibal) October 21, 2017
நமக்கு எது சரி எது தவறு என்பதைக் கூட பாஜக தான் தீர்மானிக்குமா?..பேச்சுரிமைக்கான புதிய விளக்கமாக இது இருக்கிறது. மெர்சல் பட்ததில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றி விமர்சிக்க விஜய்க்கு அத்தனை உரிமையும் உள்ளது என்று அவர் டுவீட்டியள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபிலும் டுவிட்டரில் மெர்சலுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications