தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு தர மறுப்பு... பீதியில் எம்எல்ஏக்கள்
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு தர கர்நாடக போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: கர்நாடக மாநிலத்தில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு, சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து எடப்பாடி அணியினர் இணைப்பு நிகழ்ச்சியில் பேசியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
அந்தக் கடிதத்தில் தங்களுக்கு முதல்வர் மீதான நம்பிக்கை போய் விட்டது. எனவே அவருக்கு அளித்த வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்கிறோம் என்றனர்.

புதுவையில் ரிசார்ட்
இதைத் தொடர்ந்து அந்த 19 பேரும் புதுவையில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு கொறடாவின் அனுமதி பெறாமல் ஆளுநரை சந்தித்தது குறித்து அந்த 19 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

பதில் அளிக்கவில்லை
இதற்கு கால அவகாசம் வழங்கியும் இதுவரை பதிலளிக்க வில்லை. இதற்கிடையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஜக்கையன் அங்கிருந்து தப்பி எடப்பாடி அணிக்கு தாவினார். இதற்கு எடப்பாடி அணியினரின் குதிரை பேரம்தான் காரணம் என்று குற்றம்சாட்டிய தினகரன், 18 எம்எல்ஏக்களையும் கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைத்துள்ளார்.

விடுதியில் ரெய்டு
எம்எல்ஏக்கள் விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளனரா? அல்லது தினகரனால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனரா? என்பதை அறிய கடந்த 12-ஆம் தேதி தமிழக போலீஸார் அந்த விடுதியில் சோதனை நடத்தி எம்எல்ஏக்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளதாக போலீஸிடம் தெரிவித்தனர்.

பாதுகாப்பு கோரிக்கை
இந்நிலையில் தங்களுக்கு எடப்பாடி தரப்பினரால் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதால் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று குடகு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 18 எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதிக்கு இதுபோன்ற பாதுகாப்பு வழங்க முடியாது என்று காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications